‘ஜெய் பீம்’ படத்துக்கு எந்த விருதும் கொடுக்கக்கூடாது - பாமக வழக்கறிஞர் பாலு கடிதம்
cinema
By Nandhini
ஜெய் பீம் திரைப்படத்திற்கு எந்த விருதும் கொடுக்கக் கூடாது என்று பா.ம.க வழக்கறிஞர் பாலு மத்திய மாநில அரசு அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.
தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் சூர்யா நடிப்பில் ஜெய்பீம் திரைப்படம் ஓ.டி.டி.யில் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஒளிபரப்புத் துறை செயலாளர், தமிழ்நாடு மக்கள் தொடர்பு துறை செயலாளருக்கு பாமகவைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலு எழுதியுள்ள கடிதத்தில், ‘ஜெய் பீம்’ திரைப்படத்திற்கு எந்த ஒரு விருதையும் வழங்கக்கூடாது என்று குறிப்பிட்டிருக்கிறார்.