இன்று முதல் அமலானது புதிய தளர்வுகள் - 4 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கம்!
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பேருந்துகள் இயங்கத்தொடங்கியுள்ளன.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கானது படிப்படியாக தளர்த்தப்பட்டு தற்போது இன்று முதல் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மட்டும் 50 சதவீத பயணிகளுடன் பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.
இதன்படி, முதல்கட்டமாக 1,400 பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்துகக்ழகம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மெட்ரோ ரயில்கள் காலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
கூட்டம் அதிகமாக இருக்கும் காலை மற்றும் மாலையில் 5 நிமிட இடைவெளியிலும் பிற நேரங்களில் 10 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.