கோவை மாணவி தற்கொலை : பள்ளிக்கல்வித்துறையின் அறிவித்த அதிரடி உத்தரவு!

tamilnadu
By Nandhini Nov 16, 2021 05:25 AM GMT
Report

கோவை மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் முதன்மை கல்வி அலுவலர் விசாரணை நடத்தி அறிக்கை தர பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கோவை கோட்டைமேடு ஆர்.எஸ். புரத்தில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் படித்து வந்த 12ம் வகுப்பு மாணவி ஆசிரியரின் பாலியல் தொல்லை காரணமாக கடந்த 11ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரத்தில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத பள்ளி தலைமை ஆசிரியர் மீரா ஜாக்சனையும் போலீசார் கைது செய்து, அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மாணவியின் தற்கொலை குறித்து முதன்மை கல்வி அலுவலர் முழுமையாக விசாரணை நடத்தி அதன் பிறகு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது. பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வரும் 23ம் தேதி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கூட்டத்திற்கும் பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்திருக்கிறது.

இது குறித்து அன்பில் மகேஷ் கூறுகையில், அனைத்து பள்ளிகளிலும் வரும் காலங்களில் பெண் ஆசிரியர் தலைமையில் மேலாண்மை குழு அமைக்கப்படும். குற்றம் செய்பவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும். இதுபோன்ற பாலியல் சீண்டல் புகார் தொடர்பாக அனைத்து கல்வி நிலையங்களும் ஹெல்ப்லைன் புகார் வைக்கப்பட்டிருக்கிறது. அது தொடர்பாக மாணவர்களுக்கு முழுமையான விழிப்புணர்வு கிடையாது. பள்ளிகள் முழுமையாக திறக்கப்பட்ட பின்னர், விழிப்புணர்வு மாணவர்களுக்கு ஏற்படுத்தப்படும் என்றார்.   

கோவை மாணவி தற்கொலை : பள்ளிக்கல்வித்துறையின் அறிவித்த அதிரடி உத்தரவு! | Tamilnadu