கொட்டித் தீர்க்கும் கனமழை : சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

tamilnadu
By Nandhini Nov 07, 2021 04:51 AM GMT
Report

கனமழை காரணமாக சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வருகிற 9 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நகரக் கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்து.

இந்நிலையில், நேற்று சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டுத் தீர்த்து வருகிறது. இதனால், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சாலைகளில் வெள்ள நீர் தேங்கி இருக்கிறது. மேலும், தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

இதனையடுத்து, சென்னையில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருப்பதால் சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.   

கொட்டித் தீர்க்கும் கனமழை : சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை | Tamilnadu