தமிழகம் முழுவதும் அடுத்த அதிரடி - டிஜிபி சைலேந்திர பாபு பிறப்பித்த மாஸான உத்தரவு
தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அனைத்து காவல் துறை அதிகாரிகளுக்கும் டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டிருக்கிறார்.
சென்னையில் முதல்வரின் சாலை பயணத்துக்காக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அப்போது, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியின் காரும் நிறுத்தப்பட்டதற்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து டிஜிபி சைலேந்திர பாபு மாஸ், எனவே, முக்கிய பிரமுகர்களின் வருகைக்காக போக்குவரத்தை நிறுத்தும் போது, மற்ற முக்கிய பிரமுகர்கள் பாதிக்கப்படாதவாறு கவனித்துக் கொள்ள வேண்டும். மேலும் முக்கிய சாலைகளில் தீவிர வாகன சோதனைகள் அதிகாரிகள் நடத்த வேண்டும்.
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா விதிமுறைகளைக் கடைபிடிக்காத நபர்கள், முகக் கவசம் அணியாமல் வாகனங்களில் செல்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கும் பணியை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று அவர் உத்தரவிட்டிருக்கிறார்.
