இந்த மாவட்டங்களில் மட்டும 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் - சென்னை வானிலை மையம் தகவல்

rain tamilnadu
By Nandhini Aug 12, 2021 09:16 AM GMT
Report

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று தமிழகம் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு -

நாளை நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம். வருகின்ற 15ஆம் தேதி நீலகிரி கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். வருகின்ற 15, 16ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

இந்த மாவட்டங்களில் மட்டும 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் - சென்னை வானிலை மையம் தகவல் | Tamilnadu

சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் இருக்கும். இன்று முதல் வருகின்ற 16ம் தேதி வரை தென்மேற்கு வங்கக்கடல், தென்கிழக்கு வங்கக் கடல், தென் மேற்கு, மத்திய மேற்கு வங்க கடல், தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் ஆகிய பகுதிகளில் காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதியில் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.