‘இந்த சாதி பசங்க இப்படித்தானா’ - தலித் சமூகத்தை இழிவாக பேசி வம்பில் சிக்கிக்கொண்ட மீரா - கடும் நடவடிக்கை பாயுமா?
சர்ச்சைகளின் நாயகி என்று சொல்வதே சாலப் பொருந்தும். நாளொரு சர்ச்சை பொழுதொரு பிரச்சினையாகவே மீரா மிதுன் சமூக வலைதளங்களில் உலவிக் கொண்டிருக்கிறார்.
இவர் தமிழ் சினிமாத்துறையில் முன்னணி நட்சத்திர நடிகர்களான விஜய், சூர்யா ஆகியோரை மிகவும் தரக்குறைவாகப் பேசி ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார். இவரை இயக்குநர் இமயம் பாரதிராஜா வன்மையாகக் கண்டித்தார்.
இந்நிலையில், தற்போது இதே கருத்தை முன்வைத்து தலித் சமூகத்தை மிகவும் இழிவாகப் பேசியிருக்கிறார் மிராமிதுன். தனது காதலன் சாம்முடன் சேர்ந்து வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டார்.
அந்த வீடியோவில், ஓபனாகவே சாதியை பற்றி திட்டியிருக்கிறார். தலித் சமூகத்தைச் சார்ந்த இயக்குநர்கள், நடிகைகள் தான் தன்னுடைய முகத்தைப் பயன்படுத்துவதாகவும், இவர்களை எல்லாம் சினிமாவை விட்டு துரத்த வேண்டும் என்றும் பேசியுள்ளார்
இவருடைய பேச்சுக்கு சமூகவலைத்தளத்தில் பலர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். அவரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் எனவும் குரல் எழுப்பி வருகின்றனர்.
சட்டரீதியான நடவடிக்கை தேவை..@CMOTamilnadu @mkstalin @Udhaystalin @thirumaofficial @WriterRavikumar @tnpoliceoffl pic.twitter.com/akusWxoX1G
— Ilayabarathi Ambedkar (@IlayabarathiAm1) August 6, 2021