ஒரு தவணை தடுப்பூசி கூட செலுத்தாதவர்களின் பட்டியல் தயார் செய்யப்படும் - அமைச்சர் சேகர் பாபு

tamilnadu
By Nandhini May 16, 2021 10:18 AM GMT
Report

சென்னையில் இதுவரை ஒரு தவணை தடுப்பூசி கூட செலுத்தாதவர்களின் பட்டியலை தயார் செய்து வீடு வீடாக சென்று மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளது என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள தனியார் பள்ளியில் அமைந்திருக்கும் ஆக்ஸிஜன் செறியூட்டிகள் வசதியுடன் கூடிய, கொரோனா சிகிச்சை மையத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் ஆகியோர் பார்வையிட்டு திறந்து வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர் பாபு பேசியதாவது -

இன்று எழும்பூரில் திறக்கப்பட்ட தனியார் பள்ளியில் 104 படுக்கைகள் ஆக்ஸிஜசன் வசதி கொண்ட கொரோனா சிகிச்சை மையம் அமைக்கபட்டுள்ளது.

மருத்துவ வசதி மற்றும் மருத்துவர்கள் செலவு, மேற்சிகிச்சைக்கு நோயாளிகளை அனுப்ப ஆம்புலன்ஸ், 7 மருத்துவர்கள், 24 செவிலியர்கள் 24 மணி நேரமும் செயல்படுவார்கள். இங்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சைச் செலவுகளை பள்ளி நிர்வாகமே ஏற்றுக்கொள்ளும்.

சென்னையில் படுக்கைப் பற்றாக்குறையை குறைக்க லயோலா கல்லூரியிலும், ஈச்சம்பாக்கம் மற்றும் பெரம்பூர் டான்பாஸ்கோ பள்ளியில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கபட உள்ளோம்.

எங்கெல்லாம் பிரச்சினைகள் கவனத்திற்கு வருகிறதோ அங்கு ஆய்வு மேற்கொண்டு உடனடியாக சரி செய்து வருகிறோம்.

மாயனங்களில் மாநகராட்சி ஆணையர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். விரைவில் மாயானங்களில் உள்ள சிக்கல்கள் களையப்படும்.

இதுவரை ஒரு தவணை தடுப்பூசிக் கூட செலுத்தாதவர்களின் பட்டியலைத் தயார் செய்து வீடு வீடாக சென்று மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.