கொரோனாவால் இறந்துபோன மூதாட்டி - தகனம் செய்வதற்கு முன் அழுதுகொண்டே எழுந்ததால் பரபரப்பு!

tamilnadu
By Nandhini May 15, 2021 10:24 AM GMT
Report

கொரோனா தொற்றால் இறந்த மூதாட்டியை தகனம் செய்ய முற்பட்டபோது எழுந்து உட்கார்ந்து அழுத சம்பவம் அப்பகுதி மக்களுக்கு ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. 

மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் சகுந்தலா கெய்க்வாட் (76). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து இவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.

இதனையடுத்து, மூதாட்டின் உடல்நிலை மோசமடைந்ததால் அவர் கடந்த 10ம் தேதி பரமதியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.

அந்த மருத்துவமனையில் படுக்கைக் கிடைக்க நேரமானதால் மூதாட்டி சுயநினைவை இழந்தார். உடல் அசைவு இல்லாமல் கிடந்தார் மூதாட்டி. அதனையடுத்து, மூதாட்டி இறந்து விட்டதாக எண்ணி அவரது குடும்பத்தினர் இறுதி சடங்குகிற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

மூதாட்டியை சவப்பெட்டிக்குள் வைத்து தகனம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மூதாட்டி அழுது கொண்டே எழுந்து அமர்ந்துள்ளார்.

இதைக் கண்டதும், அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனாவால் இறந்துபோன மூதாட்டி - தகனம் செய்வதற்கு முன் அழுதுகொண்டே எழுந்ததால் பரபரப்பு! | Tamilnadu