உருவாகிய டவ்தே புயல் - புரட்டியெடுக்கும் தொடர் மழை - நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்

tamilnadu
By Nandhini May 15, 2021 09:44 AM GMT
Report

அரபிக் கடலில் உருவாகியுள்ள டவ்-தே புயலின் காரணமாக நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மீட்பு பணிகளுக்காக கோவையிலிருந்து தேசிய பேரிடர் மேளாண்மை குழுக்கள் 22 வீரர்கள் உதகை வந்தடைந்துள்ளனர்.

அரபிக் கடலில் உருவாகியுள்ள டவ்தே புயலின் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உதகை, கூடலூர் மற்றும் குன்னூர் ஆகிய பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதைத் தொடர்ந்து, மீட்பு பணிகளுக்காக அரக்கோணத்திலிருந்து 22 தேசிய பேரிடர் குழுவினர் இன்று பிற்பகலில் உதகை வந்தடைந்தனர்.

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர், நீலகிரி மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டதன் பேரில் சீனியர் கமாண்ட் ரேகா நம்பியார் உத்தரவின் பேரில் கமாண்டர் கணேஷ் பிரசாத் தலைமையில் 22 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் வந்தனர்.

இதனிடையே, நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், உள்ளிட்டப் பகுதிகளில் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஆகிய 283 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் 456 பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

உருவாகிய டவ்தே புயல் - புரட்டியெடுக்கும் தொடர் மழை - நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் | Tamilnadu