சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அதிரடியாக இடமாற்றம்!

tamilnadu
By Nandhini May 09, 2021 10:04 AM GMT
Report

சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தற்போது அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

தமிழகத்தில் கொரோனா 2ம் அலை அதிகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்றால் நாளுக்கு நாள் மக்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். நாளை முதல் 24ம் தேதி வரை இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது.

கடந்த 7ம் தேதி தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். இதனையடுத்து, பல அதிகாரிகள் கொரோனா பேரிடர் காலத்தைக் கருத்தில் கொண்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த பிரகாஷ் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அதிரடியாக இடமாற்றம்! | Tamilnadu

இவருக்கு பதிலாக வேளாண் துறைச் செயலாளராக இருந்த ககன்தீப் சிங் பேடி சென்னை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

ககன்தீப் சிங் ஊரக வளர்ச்சித் துறையில் மிகுந்த அனுபவம் உடையவர். கடந்த 10 ஆண்டுகளில் பேரிடர் காலங்களில் பணியாற்றி வந்தவர். அத்துடன் ககன்தீப்சிங் மதுரை மாநகராட்சி ஆணையராக பணி புரிந்துள்ளார். புயல் மற்றும் சவாலான பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

இதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு தற்போது அவரை சென்னை மாநகராட்சி ஆணையராக நியமித்துள்ளது.