தமிழகம் முழுவதும் குப்பை கையாளும் பணியாளர்களுக்கு PPE கிட் வழங்கப்படும் : ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தைக் கடந்து சென்றுக்கொண்டுள்ளது.
இதனையடுத்து, தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தத் தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு, ஞாயிறுதோறும் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறைச் செயலாளர் பேசியதாவது -
இன்று ஒரே நாளில் 15,684 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 10,97,672 ஆக அதிகரித்துள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 1,07,145 பேர் கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். இன்று கொரோனாவுக்கு 94 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒட்டுமொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 13,651 ஆக அதிகரித்திருக்கிறது. மேலும், கொரோனா சிகிச்சை மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டவர்கள் உபயோகித்த PPE கிட் மற்றும் அவர்கள் சாப்பிட்ட உணவு பொட்டலங்கள், மருத்துவ கழிவுகள் உள்ளிட்டவைகளை குப்பை கையாளும் பணியாளர்கள் PPE கிட் அணியாமல் கையாளும் அவலம் ஏற்பட்டுள்ளது.
கொரோனா கேர் சென்டர்களில் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டவர்கள் பயன்படுத்திய PPE கிட், உணவு பொட்டலங்கள், மருத்துவ கழிவுகள் உள்ளிட்டவைகளை குப்பை கையாளும் பணியாளர்கள் குறித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இனி PPE கிட் அணியாமல் குப்பை கையாளும் பணியாளர்கள் பணியில் ஈடுபடாதவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் குப்பை கையாளும் பணியாளர்களுக்கு PPE கிட் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.