ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவின் 2ம் அலையின் தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. ஒரு நாளைக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டி சென்றுக்கொண்டிருக்கிறது.
நோயாளிகள் அதிகரித்துள்ளதால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நிலைமையை சமாளிக்க அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.