ஸ்மார்ட் கடைகள் அமைக்க எதிர்ப்பு- வியாபாரிகள் மெரினாவில் சாலை மறியல்

tamilnadu
By Nandhini Apr 23, 2021 07:47 AM GMT
Report

சென்னை மெரினா கடற்கரை பகுதியில் இயங்கி வந்த கடைகளை முன் அறிவிப்பு எதுவும் இன்றி மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி வருவதாகவும், ஸ்மார்ட் கடைகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும் கடை உரிமையாளர்கள் சென்னை மெரினா, காமராஜர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை மெரினா கடற்கரையில் சுமார் 1600 கடைகள் இயங்கி வந்தது. இந்த கடையில் உயர்நீதிமன்றத்தின் ஆணைக்கிணங்க 1500 கடைகள் செயல்படுவதற்கான அனுமதி வழங்கப்பட்டது. மெரினா கடற்கரையில் இருக்கும் கடைகளை அகற்றிவிட்டு, 900 கடைகளை மட்டும் வியாபாரிகள் நடத்த மாநகராட்சி அனுமதி கொடுத்துள்ளது.

மாநகராட்சியால் வழங்கப்படும் ஸ்மார்ட் கடைகள் மட்டுமே மெரினா கடற்கரையில் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. இந்நிலையில், கடைகள் நடத்த, குலுக்கல் முறையில் 900 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டார்கள். மெரினா கடற்கரையில் தற்போதுள்ள கடைகளை அகற்றிவிட்டு, ஸ்மார்ட் கடைகளை அமைக்கும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

ஸ்மார்ட் கடைகள் அமைக்க எதிர்ப்பு- வியாபாரிகள் மெரினாவில் சாலை மறியல் | Tamilnadu

1500 கடைகள் இயங்கி வந்த நிலையில் வெறும் 900 கடைகள் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதிலும் 60% மட்டுமே இதற்கு முன்பாக கடைகள் நடத்தி வந்த நபர்களுக்கும் மீதமுள்ள 40% வெளியாட்களுக்கும் கொடுக்கப்பட்டதாக இவர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. இதன் காரணமாக தங்களின் வாழ்வாதாரம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தற்போது வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.