முத்தமிழ் முருகன் மாநாடு - பெயருக்கு என ஒன்றை நடத்துகிறார்கள்..தமிழிசை தாக்கு!
முத்தமிழ் முருகன் மாநாடு குறித்து தமிழிசை சவுந்தரராஜன் கடும் கண்டனம்.
தமிழிசை தாக்கு
பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் மத்தியில் பேசியுள்ளார். அப்போது அவர், சிறுபான்மையின மாநாடு தமிழகத்தில்,
ஏதாவது ஒரு பகுதியில் நடந்தது என்றால் அங்கே முதல் அமைச்சர் போய் தொடங்கி வைக்காமல் இருப்பாரா? உலக அளவிலான முருகன் முருகன் மாநாட்டில் முதலமைச்சர் நேரில் கலந்து கொண்டிருக்க வேண்டும். மற்ற மத நிகழ்வுகளில் நேரில் கலந்து கொள்ளும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்,
முருகன் மாநாடு..
முருகன் மாநாட்டிற்கு செல்லவில்லை. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் முருகன் மாநாட்டிற்கு செல்லவில்லை. சேகர் பாபு ஆன்மீக உணர்வோடு பணியாற்றிக் கொண்டு இருக்கிறார். பெயருக்கு என ஒன்றை நடத்துகிறார்கள் எங்கள் நிலைப்பாட்டில் நாங்கள் அப்படியேத்தான்
இருப்போம் என்பதை முதலமைச்சரின் செயல்பாடு காட்டுகிறது. அண்ணாவின் தமிழை பின்பற்றியவர்கள்; ஆண்டாளின் தமிழையும் பின்பற்ற வேண்டி வரும் என்பதை இந்த மாநாடு வலியுறுத்துகிறது" என்று தெரிவித்துள்ளார்.