பிலிப்பைன்ஸில் தமிழக மருத்துவ மாணவர் தற்கொலை - உடலை தமிழகம் கொண்டு வர தாய் கோரிக்கை..!

Tamil nadu
By Thahir Apr 23, 2022 04:30 AM GMT
Report

பிலிப்பைன்ஸில் தமிழக மருத்துவ மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் அடுத்த இழுபட்டியைச் சேர்ந்த பிரதீப் என்ற மாணவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள டாவோ நகரில் உள்ள மருத்துவ கல்லுாரியில் இறுதியாண்டு படித்து வருகிறார்.

கடந்த 19 ஆம் தேதி பிரதீப் தனது அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். தனது மகனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறும் அவர்கள் தமிழக அரசு மாணவனின் உடலை தமிழகம் கொண்டு வர உதவிட கோரிக்கை விடுத்துள்ளனர்.