தரமான கல்வி வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழகம் 2ம் இடம் - முதலமைச்சர் பெருமிதம்
பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் பங்கேற்று நம்ம ஸ்கூல் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
தமிழகம் 2ம் இடம்
பின்னர் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளி பருவத்தில் துள்ளி திரிந்த அந்த காலத்தை யாராலும் மறக்க முடியாது.
பெரும்பாலும் நெருங்கிய தோழர்கள் என்றால் அது பள்ளிக்கால தோழர்களை தான் சொல்வதுண்டு. நம் குழந்தைகளாக இருந்த போது கற்றுக் கொடுத்த ஆசியரியரின் பெயரை நிச்சயம் மறக்க மாட்டோம்.
ஒவ்வொருவர் வாழ்விலும் வசந்த காலம் என்பது பள்ளிக்காலம் தான். நாம் இந்த அளவு உயரத்தை அடைவதற்கு உதவியாக இருந்தது அந்த பள்ளிக்கூடம் தான் அந்த பள்ளிக்கூடாங்களுக்கு நாம் உதவி செய்திட வேண்டாமா? என்ற உன்னதமான நோக்கத்தோடு நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.
எல்லாவற்றையும் அரசாங்கம் செய்திட முடியாது, மக்களும் கைக்கோர்க்க வேண்டும். நம்பர் 1 முதலமைச்சர் என்பதை விட நம்பர் 1 தமிழ்நாடு என்று வர வேண்டும் என்று ஆசைப்படுவதாக தெரிவித்தார்.
தரமான கல்வி வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழகம் 2ம் இடத்தில் இருக்கிறது. முதல் இடத்தை பிடிப்பதற்காக பள்ளிக்கல்வித்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இல்லம் தேடி கல்வித்திட்டம் முழு வெற்றியை கொடுத்துக் கொண்டிருக்கிறது. பள்ளி செல்லாத குழந்தைகளை மீண்டும் பள்ளிகளுக்கு அழைத்துக் கொண்டு வரும் சூழலை ஏற்படுத்தியிருக்கோம்.
எண்ணும், எழுத்தும் இயக்கம் தொடங்கப்பட்டு இருக்கிறது. மாதிரி பள்ளிகள் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நான் முதல்வன் என்ற திட்டத்தின் படி பயிற்சி அளிக்க இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான சிகிச்சையும், பொருட்களும், கல்வியுடன் சேர்த்து வழங்கப்பட்டு வருகிறது.