அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது வரம்பு 60 ஆக உயர்த்தப்பட்டது

india tamilnadu palanisami
By Jon Feb 25, 2021 06:14 PM GMT
Report

தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் விவாததின் போது அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது வரம்பு 60 ஆக உயர்த்தப்பட்டது.

தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது 110-வது விதியின்கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது: * தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்படும். * 2021 மே 31ந்தேதிக்குள் ஓய்வு பெறும் அனைவருக்கும் புதிய ஓய்வு வயது வரம்பு பொருந்தும்.

* தற்போது அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 59 ஆக இருக்கும் நிலையில் வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.