குடியரசு தினவிழா - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடி ஏற்றினார்!
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.
குடியரசு தினவிழா
தமிழக அரசு சார்பில் மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தினவிழா நடைபெற்று வருகிறது. காலை 7.52 மணிக்கு விழாப்பகுதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தடைந்தார்.
காரின் முன்னும் பின்னும் போலீசாரின் மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ முதலமைச்சர் அழைத்து வரப்பட்டார். காலை 7.54 மணிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மனைவி லட்சுமி ரவியுடன் வருகை தந்தார்.
அணிவகுப்பு
அவர், விமானப்படையினர் மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ அழைத்து வரப்பட்டார். அவரை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
பின்னர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து முப்படை சார்பில் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ஆளுநர் ஆர்.என். ரவி ஏற்றுக் கொண்டார்.