பொட்டு அம்மான் குறித்த சீமானின் பேச்சை புலம்பெயர் தமிழர்கள் கண்டிக்க வேண்டும் - வன்னி அரசு

seeman Naam tamizhar Vanni Arasu Pottu Ammaan
By mohanelango Apr 16, 2021 12:32 PM GMT
Report

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு ஐபிசி தமிழ்நாடு வலைக்காட்சிக்கு இன்று சிறப்பு பேட்டி அளித்தார்.

அதில், “அம்பேத்கர் பிறந்தநாள் அன்று அவருக்கு புகழ் வணக்கம் செலுத்தாத சீமான் சாதியை ஒழிக்க போராடுவதாகச் சொல்வது வேடிக்கையாக உள்ளது. தமிழ் தேசியம் என்ற பெயரில் சீமான் சாதியவாதம் பேசுகிறார்.

அரக்கோணத்தில் தலித் இளைஞர்கல் இருவர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து சீமான் போராட்டம் நடத்தினாரா. அப்போது சீமான் எங்கு சென்றார். 

பொட்டு அம்மன் குறித்து சீமான் பேசியதற்கு அவர் தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும். இதனை புலம்பெயர் தமிழர்கள் கண்டிக்க வேண்டும்.

ஈழப் போராளிகளுக்கு உதவிகரமாக இருந்த வைகோ உள்ளிட்டோர்களை தமிழர்கள் இல்லை என்று நாம் தமிழர் கட்சியினர் மற்றும் சீமான் பரப்புரை செய்வது பிரபாகரனுக்கு செய்யும் துரோகம்” என்றும் குறிப்பிட்டார்.