நகைச்சுவை நடிகர் 'போண்டா மணி' காலமானார் - திரையுலகில் அடுத்த சோகம்..!

Tamil Cinema Actors Death Tamil Actors Tamil Actress
By Jiyath Dec 24, 2023 03:18 AM GMT
Report

நகைச்சுவை நடிகர் போண்டா மணி உடல்நலக்குறைவால் காலமானார். 

நடிகர் போண்டா மணி 

நடிகர் பாக்யராஜின் 'பவுனு பவுனுதான்' என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் நடிகர் போண்டா மணி. இவர் இலங்கையை பூர்வீமாக கொண்டவர். நடிகர் வடிவேலுவுடன் இனைந்து பல காமெடிகளில் கலக்கியிருப்பார்.

நகைச்சுவை நடிகர்

குறிப்பாக "போலீஸ் வந்து அடிச்சு கேட்டாலும் சொல்லாதீங்க" என வடிவேலுவிடம் இவர் கூறும் காமெடி மிகவும் பிரபலம். இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் போண்டா மணி நடித்துள்ளார். கொரோனா காலத்தில் சிறுநீரக பிரச்னையால் அவதிப்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார்.

காலமானார் 

இதையடுத்து ஒருசில படங்களில் நடித்து வந்த நிலையில், நேற்று இரவு வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு போண்டா மணியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

நகைச்சுவை நடிகர்

தற்போது அவரின் உடல், சென்னை பொழிச்சலூரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நடிகர் போண்டா மணியின் மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திரையுலகினர் பலரும் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், அவரின் காமெடிகளை பார்த்து ரசித்த, ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.