நிலவில் நீல் ஆம்ஸ்ட்ராங் கால் வைத்தது உண்மையா? இதை அமெரிக்கா போலியாக சித்தரித்து படமாக்கியதா? அதிர்ச்சி தகவல்!
அப்போலோ விண்கலம்
1960 ஆம் ஆண்டு அமெரிக்கா முதன் முதலாக நிலவில் மனிதர்களை தரை இறக்கியது. இது அமெரிக்காவின் மிகப்பெரிய சாதனை. ஆனால் இதை இன்றளவும் நம்பாத ஆட்களும் உள்ளனர். அவர்கள் இது ஸ்டுடியோவில் போலியாக சித்தரிக்கப்பட்ட காட்சிகள் என்று கூறுகின்றனர். இதைப்பற்றி பலபேருக்கு பல்வேறு கேள்விகளும்,சந்தேகங்களும் உள்ளன.
கேள்வியும்? பதில்களும்
இதில் நட்சத்திரங்கள் ஏன் தெரியவில்லை என்பது பலரின் கேள்வியாக உள்ளது. இதற்கு காரணம் எனப்படும் ஒளியில் இருக்கும் உட்சபட்ச மாறுபாடு என்றும், பட்ட பகலில் ஒரு வீட்டின் கதவைத்திறந்து பார்த்தால் அங்கு இருப்பவற்றை நம்மால் சரியாக பார்க்க முடியாது. இதற்கு காரணம் நாம் நிற்கும் இடத்தில் வெளிச்சம் அதிகமாக இருப்பதுதான். இதே விளைவு தான் அதற்கு காரணம் என்கிறார் திரைப்பட மற்றும் புகைப்பட கலைஞர் ஷூபின்.
1969 ஆம் ஆண்டு அமேரிக்கா- சோவியத் யூனியன் இடையே பனிப்போர் நிலவி வந்தது. அந்த காலகட்டத்தில் சோவியத்திடம் மேம்பட்ட தொழில்நுட்பம் இருந்தது. அவர்களிடம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும், செயற்கைக் கோள்களையும் கண்டறியும் மேம்பட்ட தொழில் நுட்பம் இருந்தது. எனவே நிலவில் தரையிறங்கிய நிகழ்வு போலியானதாக இருந்தால் சோவியத் அதனை கண்டரிடந்து அமெரிக்காவுக்கு எதிராக ஒரு பிரச்சாரத்தை செய்திருப்பார்கள் என்கிறார் லண்டன் பல்கலைக் கழக மூத்த பேராசிரியர் பூஸ்கே.
மேலும்,நிலவில் தரையிறங்கியதற்கு முக்கியமான சான்று அங்கிருந்து கொண்டு வரப்பட்ட கற்கள்தான் . இதைப்பற்றி இங்கிலாந்து விண்வெளி அமைப்பின் இயற்பியலாளரான லிப்பி ஜாக்சன் கூறுகையில்" சில கற்கள் இன்றளவும் சீல் செய்யப்பட்டு பாதுகாத்து வரப்படுகிறது. யாரும் அவற்றை தொட்டதில்லை. 1960,1970களிலேயே எதிர்காலத்தில் தொழில்நுட்பம் மேம்படும், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழும் என்றும் விஞ்ஞானிகள் அறிந்திருந்தனர் என்கிறார் .
நிலவில் கொடி எப்படி அசைந்தது கால்தடம் எப்படி பதிந்தது என்று கேள்வி எழுப்பப் படுகிறது. இதற்கு பதிலளித்த முதுநிலை விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் கூறியது "கொடி inertia எனும் விளைவின் மூலம் அசைந்தது என்கிறார். அதாவது ஓடும் பேருந்தில் திடீரென பிரேக் செலுத்தினால் நின்று கொண்டிருப்பவர்கள் முன்னால் தள்ளப்படுவார்கள். அதே போலத்தான் சுருட்டிப் பிடித்த கொடியை பிரித்தபோது அந்த உந்துவிசையால் கொடி படபடத்தது என்கிறார். கால்தடம் எப்படி பதிந்தது என்பதற்கு "நிலவில் வளிமண்டம் இல்லாததால் விண்கற்கள் நிலவை மோதிக்கொண்டே இருக்கும். அதனால் அவை பொடியாகி நிலவின் பரப்பு முழுவதும் ஒரு அடிக்கு குவிந்திருக்கும். இதில் கால் வைத்ததால் கால் தடம் பதிந்தது என்கிறார்.
மேலும் இதனை பலர் படமாக ஸ்டுடியோவில் சித்தரிக்கப் பட்டது என்று கூறுகின்றனர். இதற்கு பதிலளித்த அறிவியல் எழுத்தாளரான டலாஸ் கேம்பல் "அமெரிக்க நிலவில் தரையிறங்கிய ௧௯௬௯ஆம் ஆண்டு சித்தரிக்கும் படியான தொழில்நுட்பம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் ஆனால் நிலவுக்குச் செல்லும் தொழில்நுட்பம் நம்மிடம் இருந்தது என்றும் கூறுகிறார்.