அமெரிக்க ராணுவத்தில் இணைந்த முதல் தமிழ் நடிகை : இணையத்தில் குவியும் பாராட்டு
அமெரிக்க ராணுவத்தில் இணைந்துள்ள தமிழ் நடிகைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
கடந்த 2021-ம் ஆண்டு சமூக கருத்தை வலியுறுத்தி உருவான திகில் திரைப்படம் தான் ‘காதம்பரி’. இப்படத்தில் அமெரிக்க வாழ் தமிழ்ப் பெண்ணான அகிலா நாராயணன் கதாநாயகியாக அறிமுகமானார்.
நடிகையாக மட்டுமல்லாமல் பிரபல பாடகியாகவும் வலம் வந்த இவர் ஆன்லைன் மூலம்‘நைட்டிங்கிள் ஸ்கூல் ஆஃப் மியூசிக்’ என்ற இசைப் பள்ளியை நடத்தி வருகிறார்.
கலையின் மீது இவர் கொண்ட ஆர்வம் வெறும் நடிப்புடன் மட்டும் முடிந்து விடாமல் ராணுவத்தின் மீதும் பாய்ந்தது.
மிக கடினமான பயிற்சிகளை கொண்ட அமெரிக்க ராணுவத்தில் பட்டம் பெறுவது என்பது மிக சவாலானது என்றாலும்,
இவரின் விருப்பத்துக்கு குடும்பத்தாரும் சம்மதம் தெரிவிக்க, கடுமையான பல மாத பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்து பட்டம் பெற்ற அகிலா நாராயணன், அமெரிக்க ராணுவத்தில் வழக்கறிஞராக இணைந்துள்ளார்.
இதன் மூலம் அமெரிக்க ராணுவத்தில் இணைந்த முதல் தமிழ் நடிகை என்ற பெருமையை பெற்றுள்ளார் அகிலா நாராயணன்.
இந்நிலையில், அவரின் சேவை மனப்பான்மைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து பேசிய அகிலா நாராயணன,
“அமெரிக்க ராணுவ வீரர்களுக்கான சட்ட ஆலோசகராக செயலாற்ற இருக்கிறேன். நான் வாழும் நாட்டுக்காக சேவை செய்வதற்காகவே இத்துறையில் இணைந்துள்ளேன்.
என்னுடைய சேவையை மனதார உறுதியோடு செய்வேன்” எனத் தெரிவித்துள்ளார்.