கசகசா செடியை பயிரிட்டால் கொளுத்துவோம் - தாலிபான்கள் கடும் எச்சரிக்கை!

Ban Afganistan Taliban Orders PoppyPlant
By Thahir Apr 04, 2022 05:17 AM GMT
Report

ஆப்கானிஸ்தானில் கசகசா செடிகளை பயிரிட்டால் கொளுத்துவோம் என தாலிபான் அரசு எச்சரித்துள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றினர். இதையடுத்து அந்நாட்டை ஆட்சி செய்து வரும் அவர்கள் கடும் நிபந்தனைகளை விதித்து வருகின்றனர்.

குறிப்பாக பெண்கள் கல்வி உள்ளிட்டவற்றில் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஆப்கானிஸ்தான் கசகசா பயிரிட தாலிபான் அரசு தடை விதித்துள்ளது.

கசகசா பயிரிலிருந்து அபின் போன்ற போதை பொருட்கள் தயாரிக்கப்படுவதால் தடை விதித்துள்ளது. தடையை மீறி கசகசா பயிரிட்டால் வயல்கள் கொளுத்தப்படும் என தாலிபான்கள் எச்சரித்துள்ளனர்.