தாஜ்மஹாலை ஷாஜஹான் கட்டவில்லை - வரலாற்றை திருத்தக் கோரி நீதிமன்றத்தில் மனு!

Delhi India
By Jiyath Nov 03, 2023 06:55 AM GMT
Report

தாஜ்மஹாலை காட்டியது தொடர்பாக வரலாற்றை மாற்றி எழுத வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

தாஜ்மஹால்

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் யமுனை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது 7 உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால். இந்த அதிசயத்தை காண உலகம் முழுவதும் இருந்து சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர்.

தாஜ்மஹாலை ஷாஜஹான் கட்டவில்லை - வரலாற்றை திருத்தக் கோரி நீதிமன்றத்தில் மனு! | Taj Mahal Not Built Shahjahan Pil Filed Delhi Hc

சுமார் 42 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் இந்தக் கட்டிடம் முழுவதும் பளிங்குக் கற்களால் கட்டப்பட்டுள்ளது. மேலும் உலகின் காதல் சின்னமாக தாஜ்மஹால் கருதப்படுகிறது. முகலாய மன்னரான ஹாஜஹான் தனது மனைவி மும்தாஜ் நினைவாக தாஜ்மஹாலை கட்டியதாகத்தான் இதுவரை நமக்கு தெரியும். அப்படிதான் நாம் படித்தும் வருகிறோம்.

குறும்பட போட்டியில் வெற்றி! ஜப்பானுக்கு புறப்பட்ட குரும்பபட்டி அரசு பள்ளி மாணவி!

குறும்பட போட்டியில் வெற்றி! ஜப்பானுக்கு புறப்பட்ட குரும்பபட்டி அரசு பள்ளி மாணவி!

பொதுநல மனு

ஆனால் திடீரென இதை கேள்விக்குள்ளாக்கி, இந்து சேனா அமைப்பைச் சேர்ந்த சுர்ஜித் யாதவ் என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த பொதுநல மனுவில் "முகலாய மன்னர் ஷாஜஹான் தாஜ்மஹாலை கட்டவில்லை.

தாஜ்மஹாலை ஷாஜஹான் கட்டவில்லை - வரலாற்றை திருத்தக் கோரி நீதிமன்றத்தில் மனு! | Taj Mahal Not Built Shahjahan Pil Filed Delhi Hc

ராஜா மான் சிங்கின் அரண்மனையையே ஷாஜஹான் சீரமைத்துள்ளார். எனவே வரலாற்றை மாற்றி எழுதவேண்டும்" என சுர்ஜித் யாதவ் கோரியுள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும் என தெரிகிறது.