IND vs SA ; டி20 உலக கோப்பையை வெல்லப்போவது யார்? பிரபல ஜோதிடர்களின் கணிப்பு இதோ!
கோப்பையை வெல்லும் அணி யார் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
உலக கோப்பை
நடப்பாண்டின் டி20 உலக கோப்பை மிக சிறப்பாக நடைபெற்று வந்த தொடர் தற்போது இறுதி போட்டியை எட்டியுள்ளது. அதில் இந்தியாவும் தென் ஆப்பிரிக்காவும் மோதுகின்றன.முன்னாள் சாம்பியன் இந்தியாவும், முதல்முறையாக இறுதிப்போட்டி நுழைந்திருக்கும் தென் ஆப்பிரிக்காவும் கோப்பையை
வெல்வதற்கு கடுமையாகப் போராடுவார்கள் எனவே போட்டி ஒவ்வொரு நிமிடமும் விறுவிறுப்பாக இருக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த இறுதிப்போட்டி பார்படோஸில் தீவில் உள்ள பிரிட்ஜ்டவுன் நகரின் கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும்.
இங்கு இருந்து வரும் நேரடி தகவல்கள்படி, சுழல்பந்துவீச்சுக்கு இந்த மைதானம் மிகவும் ஏற்றது என வரலாறு கூறுகிறது.இந்த மைதானத்தில் பந்து பெரிய அளவு பவுன்ஸ் ஆகாது.கிட்டத்தட்ட நம்மவூர் மைதானத்தில் விளையாடுவது போன்ற அனுபவத்தைத் தரும் என்பது இந்தியாவுக்குக் கூடுதல் சாதகம்.
இந்த மைதானத்தில், இதுவரை நடந்த போட்டிகளில், முதலில் பேட்டிங் செய்த அணிதான், 62 சதவீதம் வெற்றிப் பெற்று இருக்கிறது எனச் சொல்கிறது வரலாறு. எனவே, டாஸ் வெல்பவர்கள் பெரும்பாலும், பேட்டிங்கைதான் தேர்வு செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
கணிப்பு இதோ
இந்த நிலையில், இம்முறை கோப்பையை வெல்லப்போவது யார் என்று பிரபல ஜோதிடர்கள் கனித்துள்ளனர். அதன்படி, இந்தியா vs தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று இரவு இறுதிப் போட்டியில் மோதுகின்றன. பொதுவாக ஒரு விளையாட்டில் வெற்றி தோல்வியை கணிக்க அந்த அணியின் தலைவர்களின் சொந்த ஜாதகத்தை வைத்து கணிக்கப்படும்.
ஆகையால், இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மாவின் ஜாதகத்தில்அவரது கிரக நிலவரங்கள்படி, இந்த போட்டி நிச்சயமாக ரோகித் சர்மாவுக்கு சாதகமாகத்தான் இந்த உலகக்கோப்பை இறுதிப் போட்டி இருக்கப் போகிறது என்பதை ஓரளவுக்கு நம்மால் கணிக்க முடியும்.
இந்த முறை உலகக் கோப்பை ரோகித் சர்மாவுக்கு கிடைக்கலாம் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிறது. அதேபோல ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் ஆகியோரின் தனிப்பட்ட ஜாதகத்தின் இன்றைய ஜோதிட பலன்கள் அடிப்படையில்,
இன்று மிகச் சிறந்த ஆட்டத்தை ஏதேனும் ஒரு வகையில் அவர்கள் வெளிப்படுத்துவார்கள். தென்னாப்பிரிக்க அணியினர் கடும் போட்டியைத் தருவார்கள் என்றாலும், இந்தியாவுக்கே இறுதி வெற்றி என ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.