ஐபிஎல் தொடங்கியதிலிருந்தே இந்திய அணி T20 உலகக் கோப்பையை வென்றதே இல்லை.. - பாகிஸ்தான் பிரபல வீரர்...!

Pakistan Indian Cricket Team T20 World Cup 2022
By Nandhini Nov 11, 2022 10:36 AM GMT
Report

ஐபிஎல் தொடங்கியதிலிருந்தே இந்திய அணி T20 உலகக் கோப்பையை வென்றதே கிடையாது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான் வீரர் வாசிம் அக்ரம் சுட்டிக்காட்டியுள்ளார்.

T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த மாதம் 16-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொண்டுள்ளன.

இந்தியா தோல்வி

டி20 உலகக்கோப்பையில் நேற்று அரையிறுதி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இப்போட்டியில் அரைசதம் அடித்த கையோடு விராட் கோலி கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

இப்போட்டியின் இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து, 169 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணி ஆட்டத்தில் களமிறங்கியது.

இப்போட்டியின் இறுதியில் இங்கிலாந்து அணி 16 ஓவர்களில் 170 ரன்கள் அடித்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இப்போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து வெளியேறியுள்ளதால் இந்திய ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்.

t20-world-cup-2022-cricket-wasim-akram

ஐபிஎல் தான் காரணம்

இந்நிலையில், இந்திய அணி 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் வெற்றி பெறாததற்கு ஐபிஎல் தான் காரணம் என்று பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான் வீரர் வாசிம் அக்ரம் பேசுகையில்,

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, இந்திய அணி 20 ஓவர் உலகக் கோப்பையை வென்றதே கிடையாது. 

ஐபிஎல் தொடங்குவதற்கு முன் 2007ல் இந்தியா 20 ஓவர் உலகக் கோப்பையை வென்றது. ஆனால் ஐபிஎல் 2008ல் தொடங்கிய பிறகு இந்தியா 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் வென்றதே கிடையாது.

2011ம் ஆண்டு மட்டும் உலகக் கோப்பையை வென்றது. ஆனால் அது 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டிதான் என்றார்.