இந்தியா-பாகிஸ்தான் போட்டியை என்னால் கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை - பிரபல ஆஸ்திரேலிய வீரர் பேட்டி
இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்னால் கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை என்று பிரபல ஆஸ்திரேலிய வீரர் தெரிவித்துள்ளார்.
T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த 16-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டி அடுத்த மாதம் நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கிறது.
பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா
கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்திய அணி பாகிஸ்தானுடன் நேருக்கு நேர் மோதிக் கொண்டது.
மெல்போர்னில் நடைபெற்ற இப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி அடைந்தது.
ஆட்டமிழக்காமல் விராட் கோலி நின்று விளையாடி 82 ரன்களை குவித்தார். இது இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. தற்போது சமூகவலைத்தளங்களில் இந்திய அணி வீரர்களை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.
மிட்செல் மார்ஷ் நெகிழ்ச்சிப் பேட்டி
இந்நிலையில், இப்போட்டி குறித்து ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் பேசுகையில், மெல்போர்னில் இதைவிட சிறப்பான ஒரு கிரிக்கெட் போட்டி இதுவரை நடந்தது கிடையாது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே எப்போதுமே பார்க்க முடியாத நம்ப முடியாத ஒரு ஆட்டமாக அந்தப் போட்டி இருந்தது. என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. இப்போட்டிக்கு பிறகு, உலககோப்பையை கைப்பற்றும் எங்களது எண்ணத்தை அங்கேயே நிறுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
விராட் கோலியின் ஆட்டம் ஆச்சரியமாக இருக்கிறது. 12 மாதங்கள் அவர் அலட்சியமாக இருந்திருக்கிறார். உலகக் கோப்பையில் அவரது தனது முத்திரையை பதித்துள்ளார். இது பார்ப்பதற்கு நம்ப முடியாத ஒரு இன்னிங்ஸ்தான் என்று அவர் பேசினார்.