மோசமான செயல்பாடு கொண்ட வெள்ளைப் பந்து அணி இந்திய அணி தான்... - மைக்கேல் வாஹன் கடும் விமர்சனம்

Cricket T20 World Cup 2022
By Nandhini Nov 12, 2022 08:34 AM GMT
Report

கிரிக்கெட் வரலாற்றில் மோசமான செயல்பாடு கொண்ட வெள்ளைப் பந்து அணி இந்திய அணி தான் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹன் கடும் விமர்சனம் செய்துள்ளார்.

T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த மாதம் 16-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொண்டுள்ளன.

இந்தியா தோல்வி

டி20 உலகக்கோப்பையில் நேற்று முன்தினம் அரையிறுதி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இப்போட்டியில் அரைசதம் அடித்த கையோடு விராட் கோலி கேட்ச் கொடுத்து அவுட்டானார். இப்போட்டியின் இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து, 169 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணி ஆட்டத்தில் களமிறங்கியது.

இப்போட்டியின் இறுதியில் இங்கிலாந்து அணி 16 ஓவர்களில் 170 ரன்கள் அடித்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

இப்போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து வெளியேறியுள்ளதால் இந்திய ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். இந்திய அணி வீரர்கள் தைரியமின்றி தயக்கத்துடன் ஆடியதை முன்னாள் வீரர்கள் பலர் சமூகவலைத்தளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர்.

t20-world-cup-2022-cricket-michael-vaughan

மைக்கேல் வாஹன் விமர்சனம்

இந்நிலையில், இந்திய அணி மீது இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், சொந்த மண்ணில் 2011ம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற பிறகு இந்திய அணி என்ன செய்திருக்கிறது? ஒன்றுமே கிடையாது. கிரிக்கெட் வரலாற்றில் மோசமான செயல்பாடு கொண்ட வெள்ளைப் பந்து அணி என்றால் அது இந்திய அணி தான் என்று தெரிவித்தார்.