இதயத்தில் ஏமாற்றத்தோடு செல்கிறோம்.... - டுவிட்டரில் விராட் கோலி உருக்கம்

Virat Kohli Cricket T20 World Cup 2022
By Nandhini Nov 11, 2022 05:22 AM GMT
Report

இதயத்தில் ஏமாற்றத்தோடும் செல்கிறோம் என்று டுவிட்டரில் விராட் கோலி உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த மாதம் 16-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொண்டுள்ளன.

இந்தியா தோல்வி

டி20 உலகக்கோப்பையில் நேற்று அரையிறுதி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இப்போட்டியில் அரைசதம் அடித்த கையோடு விராட் கோலி கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதனையடுத்து, பவுண்டரிகளை பறக்கவிட்ட ஹர்திக் பாண்டியா 29 பந்துகளில் அரை சதம் கடந்தார்.

இப்போட்டியின் இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து, 169 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணி ஆட்டத்தில் களமிறங்கியது.

இப்போட்டியின் இறுதியில் இங்கிலாந்து அணி 16 ஓவர்களில் 170 ரன்கள் அடித்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

இப்போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து வெளியேறியுள்ளதால் இந்திய ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். இதனையடுத்து, வரும் நவம்பர் 13ம் தேதி இறுதிப் போட்டியில் பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன.

virat kohli

விராட் கோலி உருக்கம்

இந்நிலையில், இந்தியாவின் தோல்வி குறித்து விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், ஆஸ்திரேலிய கரையோரத்தை எங்கள் கனவை அடைவதற்கும், இதயத்தில் ஏமாற்றத்தோடும் செல்கிறோம், ஆனால் ஒரு குழுவாக பல மறக்க முடியாத தருணங்களை நாங்கள் திரும்பப் பெறலாம், மேலும் இங்கிருந்து சிறப்பாகச் செல்வதை நோக்கமாகக் கொள்ளலாம் என்று பதிவிட்டுள்ளார்.     

virat kohli - india cricket team