இந்திய அணியில் ஓட்டை இருக்கு... - வீரர்களுக்கு கபில்தேவ் கொடுத்த எச்சரிக்கை...!

Kapil Dev Cricket Indian Cricket Team T20 World Cup 2022
By Nandhini Oct 28, 2022 12:08 PM GMT
Report

இந்திய அணியில் ஓட்டை இருக்கு என்று முன்னாள் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் கபில்தேவ் வீரர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த 16-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கிறது.

பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா

கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்திய அணி பாகிஸ்தானுடன் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. மெல்போர்னில் நடைபெற்ற இப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி அடைந்தது.

ஆட்டமிழக்காமல் விராட் கோலி நின்று விளையாடி 82 ரன்களை குவித்தார். இது இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. தற்போது சமூகவலைத்தளங்களில் இந்திய அணி வீரர்களை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

நெதர்லாந்தை வீழ்த்திய இந்தியா

நேற்று சிட்னியில் நடைபெற்ற T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா- நெதர்லாந்து அணிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட் செய்ய தீர்மானித்தது.

இதனையடுத்து, முதலில் களமிங்கிய இந்திய அணி, 20 ஓவர்களில், விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி. தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இப்போட்டியின் இறுதியில், நெதர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்ததால் இந்தியா அபார வெற்றி பெற்றது.

t20-world-cup-2022-cricket-india-kapil-dev

கபில்தேவ் எச்சரிக்கை

இந்திய அணியின் இந்த இரு வெற்றி ஆட்டத்தை குறித்து முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில் -

இந்தியாவின் பந்துவீச்சு மெருகேறி வருகிறது. நாம் பேட்டிங்கில் கூடுதலாக ரன் அடிக்க வேண்டும். ஆஸ்திரேலியாலில் மைதானங்கள் எல்லாம் பெரியது. இதனால் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு கூடுதல் சாதகமாக இருக்கும் . இந்திய அணியின் பந்துவீச்சில் ஆங்காங்கே குறைகள் உள்ளது. நெதர்லாந்து போன்ற அணிக்கு எதிராக கூட நாம் சரியான திட்டமிடாமல் பந்து வீசினோம்.

வெளிப்படையாக சில குறைகள் தெளிவாகத் தெரிகின்றன. சூரியகுமார் தமக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அவர் ரன்களை வேகமாக அடிக்கிறார். இதனால் அவரை அதிகமாக புகழ வேண்டும். இதேபோன்று கேப்டன் ரோகித் சர்மா தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவது இந்திய அணிக்கு மிகவும் முக்கியம் என்றார்.