வீரர்கள் இறந்து கொண்டு இருக்கும் போது உங்களுக்கு டி20 கிரிக்கெட் தேவையா? ஓவைசி ஆவேசம்

Narendra Modi T20 Asaduddin Owaisi World Cup
By Thahir Oct 20, 2021 07:00 AM GMT
Report

டி20 உலகக் கோப்பை குறித்து கருத்து தெரிவித்துள்ள ஏஐஎம்ஐஎம் கட்சியின் நிறுவன் ஓவைசி பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

டி 20 கிரிக்கெட் தொடர்பாக பேசிய அவர், நாட்டின் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசிய ஓவைசி பிரதமர் நரேந்திர மோடி பெட்ரோல் டீசல் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

வீரர்கள் இறந்து கொண்டு இருக்கும் போது உங்களுக்கு  டி20 கிரிக்கெட் தேவையா? ஓவைசி ஆவேசம் | T20 World Cub India Narendra Modi Asaduddin Owaisi

லடாக் எல்லையில் சீன ராணுவம் இந்திய எல்லையில் அமர்ந்திருப்பது குறித்து ஒரு போதும் பேசுவதில்லை என தெரிவித்தார்.

பிரதமர் சீனாவை பற்றி பேச பயப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும் பேசிய அவர் காஷ்மீரில் மக்கள் உயிர் மீது பாகிஸ்தான் தினம் தோறும் 20-20 விளையாடி கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் உங்களுக்கு டி20 விளையாடிக் கொண்டிருக்கிறீர்களா என கேள்வி எழுப்பினார். அசாதுதீன் ஓவைசி, காஷ்மீரில் நடத்தப்பட்ட தொடர் கொலைகளைப் பற்றி பேசுகையில்,

இது பாஜக தலைமையிலான அரசின் தோல்வி என்று கூறினார். "பீகாரின் ஏழைத் தொழிலாளர்கள் கொல்லப்படுகிறார்கள், இலக்கு வைத்து கொல்லப்படுகிறார்கள்,

உளவுத்துறை அதிகாரிகள் என்ன செய்கிறார்கள் (மத்திய உள்துறை அமைச்சர்) அமித் ஷா என்ன செய்கிறார்? இது அரசாங்கத்தின் தோல்வி" என்று அவர் கூறினார்.

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் மற்றும் புல்வாமா மாவட்டங்களில் சனிக்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய இரண்டு தாக்குதல்களில் பீகாரைச் சேர்ந்த ஒரு தெரு வியாபாரி மற்றும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஒரு தொழிலாளி கொல்லப்பட்டனர்.

கடந்த சில நாட்களாக, ஜம்மு -காஷ்மீரில் பயங்கரவாதிகளால் பல பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.இது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.