டி.ராஜேந்தரின் மரணப் படுக்கைக்கு சிம்புதான் காரணமா? வெளியான தகவல் - ஷாக்கான ரசிகர்கள்
தமிழ் திரைத்துறையில் நடிகர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்டு பணியாற்றி பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் டி.ராஜேந்தர்.
எப்போதும் சுறு சுறுப்பாக இருக்கும் இவருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுததியுள்ளது.
இதனையடுத்து, நடிகரும், அவரின் மகனுமான சிம்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில், தனது தந்தைக்கு நெஞ்சு வலி ஏற்பட்ட தன் காரணமாகவே மருத்துவமனையில் அனுமதி செய்திருந்தோம் என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், டி.ராஜேந்தரின் இந்த நிலைமைக்கு சிம்புதான் காரணம் என்று தற்போது ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நயன்தாரா, ஹன்சிகா போன்ற நடிகைகளுடன் காதல் வலையில் சிக்கிய சிம்பு, பின்னர் அவர்கள் இருவரையும் பிரேக் அப் செய்துவிட்டார்.
சமீபத்தில் நடிகை நிதி அகர்வாலுடன் சிம்பு நெருக்கமாக இருந்து வருவதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும், இருவரும் தனி வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர் என்று தகவல் இணையத்தில் தீயாய் பரவியது. இது குறித்து சிம்பு தரப்பில் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.
தற்போது, சில நாட்களாக சீரியல் நடிகை ஸ்ரீநிதி, நடிகர் சிம்பு தனக்கு லவ் டார்ச்சர் கொடுத்து வருவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி சிம்புவின் வீட்டு முன் அவர் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டார்.
சிம்புவைத் தவிர நான் வேறு யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். ஜல்லிக்கட்டுக்கு மட்டும் தான் போராட்டமா? லவ்வுக்குலாம் போராட்டம் இல்லையா? என்று இன்ஸ்டாவில் பதிவிட்டார்.
மற்றொரு பதிவில் போனில் 4 சதவீதம் தான் சார்ஜ் உள்ளது. ப்ளீஸ் வாங்க. பர்ஸ்ட்டு சிம்பு வேணும், நெக்ஸ்ட் தண்ணி வேணும். எனக்கு அவ்ளோ ஒர்த்துனு இவ்ளோ வருஷமா எனக்கே தெரியல, புரிய வச்சிட்டாரு! அவர் வேணும், அவரை பார்க்கணும், இப்பவே” என்று இன்ஸ்டாவில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த பதிவுகள் இணையதளத்தில் அதிகமாக வைரலாகி வருகிறது.
இந்த விவகாரம் தான் தற்போது டி.ஆரின் உடல்நிலை பாதிக்கப்பட்டதற்கான முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது. தற்போது தமிழ் சினிமா வட்டாரத்தில் திரும்பிய பக்கமெல்லாம் இந்த செய்தி தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.