சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்ட சிறுமி- அதிரடி தீர்ப்பு வழங்கிய ஜெர்மன் நீதிமன்றம்

germany syria genocide yazidi 5yrold
By Swetha Subash Dec 02, 2021 06:37 AM GMT
Report

ஈராக் மற்றும் சிரியாவின் பெரும்பாலான இடங்களில் வசித்து வரும் குருதீஸ் மொழி பேசும் சமூகம் தான் யாஸிடி.

ஐஎஸ் தீவிரவாத இயக்கம் வலுவடைந்திருக்கும் இந்த இரு நாடுகளிலும் சிறுபான்மை இனமான யாஸிடி இனத்தைச் சேர்ந்த ஆண்களை சிறைப்பிடித்து கொடூரமாக கொல்வதும் பெண்களை வீட்டு வேலைக்காக அடிமைகளாக விற்பனை செய்தும் வந்தனர்.

அப்படி ஒரு சம்பவமாக, சிரியாவில் அடிமையாக சங்கிலியில் கட்டிவைக்கப்பட்ட சிறுமி உணவு, தண்ணீர் எதுவும் கொடுக்கப்படாமல் சித்ரவதைக்கு ஆளாகி உயிரிழந்தார்.

சர்வதேச சமூக அமைப்புகள் தெரிவித்த புகாரின் பேரில், உலகளாவிய நீதி என்ற கொள்கையின் அடிப்படையில் ஜெர்மனி நீதிமன்றம் இந்த இனப்படுகொலை வழக்கை விசாரித்து, 2 ஆண்டுகளுக்கு முன்பு கிரீஸ் நாட்டின் தாஹா அல்-ஜுமைலியும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டனர்.

கணவன், மனைவி இருவரும் நாடு கடத்தப்பட்டு ஜெர்மனி கொண்டு வரப்பட்டனர்.

யாஸிடி இனத்தை அழிக்கும் நோக்கத்தின் ஒரு பகுதியாகவே சிறுமி கொடூரமாக கொல்லப்பட்டுள்ளதால் இதனை இனப்படுகொலை என குறிப்பிட்டு, அல்-ஜுமைலிக்கு ஆயுள் தண்டனையும் அவரது மனைவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கி ஜெர்மனி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேலும் சிறுமியின் தாயாருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

யாஸிடி இனப்படுகொலை தொடர்பான வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை மனித உரிமை ஆர்வலர்கள் வரவேற்றுள்ள நிலையில் சிரியாவில் இனவெறியால் பாதிக்கப்பட்டவர்களிடம் இந்த தீர்ப்பு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.