‘‘வேறதுவும் தேவை இல்லை நீ மட்டும் போதும்’’ - நாடி நரம்பெல்லாம் பிரியாணி வெறி, ஸ்விகி தரும் சர வெடி டேட்டா

biriyani swiggy 2021report
By Irumporai Dec 23, 2021 06:43 AM GMT
Report

முகலாய மன்னர்களின் ஆட்சியில் இந்தியாவுக்குள் பிரியாணி என்ற உணவு வகை நுழைந்ததாக கூறப்படும் நிலையில், இந்த ஆண்டு 2021 - ல் ஸ்விகியில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவாக இந்தியா முழுவதும் சிக்கன் பிரியாணி தொடர்ந்து பலரின் இதயங்களை வென்று வருகிறது.

2021ஆம் ஆண்டில் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகள் குறித்த ரிப்போர்ட்டை ஸ்விகி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், “இந்த ஆண்டு ஸ்விகியில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு பட்டியலில் சிக்கன் பிரியாணி முதல் இடத்தை பிடித்துள்ளது.

இந்த டிஷ் தொடர்ச்சியாக ஆறு வருடங்கள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது. சிக்கன் பிரியாணிக்கான ஆர்டர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

அதன்படி இந்த வருடம் ஒரு நிமிடத்திற்கு 115 பிரியாணிகளும் ஒரு செகண்டிற்கு 2 பிரியாணிகளும் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக ஸ்விகி தெரிவித்துள்ளது .

கடந்த 2020 ஆம் ஆண்டில் நிமிடத்திற்கு 90 பிரியாணிகள் மட்டுமே ஆர்டர் செய்யப்பட்ட நிலையில் தற்போது  எண்ணிக்கை  உயர்ந்துள்ளது. வெஜிடபிள் பிரியாணியை பொருத்தவரை சிக்கன் பிரியாணியை விட 4.3 மடங்கு குறைவாக ஆர்டர் செய்யப்பட்டது.

கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், லக்னோ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் சிக்கன் பிரியாணியை மிகவும் விரும்பி ஆர்டர் செய்கின்றனர்” எனத் தெரிவித்துள்ளது. 

ஆமாம்,  இன்பமோ, துன்பமோ எதுவானாலும் எனக்கு துணை நீ மட்டும் தான்   சொல்லும் வெறித்தனமான அன்பான மனசு இருக்கும் அந்த பிரியாணி ரசிகர்களால் இந்த முறையும் முதலிடத்தை பிடித்துள்ளது பிரியாணி  அப்புறம் சூடா ஒரு பிரியாணி சாப்பிடலாமா ??