4 வருடங்களுக்கு பிறகு அக்னிவீரர்களின் குடும்பம் என்ன செய்யும்? : கொந்தளித்த சூர்யா சேவியர்

By Irumporai Jun 20, 2022 01:45 PM GMT
Report

இந்தியாவில் தற்போது பேசு பொருளாகியுள்ளது மத்திய அரசு கொண்டுவந்த அக்னிபாத் திட்டம் , மத்திய அரசு அறிவித்தவுடன் நாடெங்கும் கலவரங்களும் போராட்டங்களும் நடத்தப்படுகிறது இதற்கு காரணம் என்ன?

அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக வட மாநிலங்களில் போராட்டம் தீவிரமடைகிறது ஆனால் ஆக்னிபாத் திட்டம் இஸ்ரேல், அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் உள்ள ராணுவத்தின் மாதிரி வடிவம் என்றும் சில அம்சங்கள் மாற்றியமைக்கப்பட்டு இந்த திட்டம் உருவாக்கப்பட்டதாக மத்திய அரசு கூறுகிறது.

ஆனால் இந்த திட்டம் தற்போது கலவரங்களையே விளைவுகளாக கொடுத்துள்ளது.மேலும் அமெரிக்கா , இஸ்ரேல் சீனா , பிரான்ஸ் போன்ற நாடுகளில் உள்ள பொருளாதார கட்டமைப்பு என்பது வேறு, இந்தியாவின் பொருளாதார கட்டமைப்பு என்பது முற்றிலும் மாறுபட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.  

இந்த நிலையில் அக்னிபாத் திட்டம் குறித்த நெறியாளார் லியோ எழுப்பிய கேள்விகளுக்கு அரசியல் விமர்சகர் சேவியர் அளித்த பதில்கள் உங்களுக்காக நமது ஐபிசி தமிழ் யூடியூப் பக்கத்தில்