கருணாஸூக்காக மண்டியிட்டு வேண்டிய நடிகர் சூர்யா - நெகிழ்ச்சியடைந்த ரசிகர்கள்

Suriya
By Petchi Avudaiappan May 05, 2022 11:49 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

தனக்காக நடிகர்  சூர்யா செய்த செயலை மறக்க முடியாது என நடிகர் கருணாஸ் நினைவு கூர்ந்துள்ளார். 

தமிழ் சினிமாவின் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் நடிகர் கருணாஸ் நாட்டுப்புற பாடல்களை பாடி தமிழ் ரசிகர்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்ற நிலையில் நந்தா படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் காமெடியனாக நடித்து வந்த அவர் திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். 

இதனிடையே நந்தா படத்தில் சூர்யாவுடன் நடித்த நிலையில், அதில் இடம் பெற்ற இவரின் லொடுக்கு பாண்டி கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை இன்றளவும் பெற்றுள்ளது. இந்த படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது கருணாஸின் மனைவி கர்ப்பமாக இருந்துள்ளார்.

கருணாஸ் படப்பிடிப்பில் இருந்தபோது குழந்தை பிறக்க நேரிட்டது அப்பொழுது மனைவியை காண முடியாமல் தவித்த தனக்காக ராமேஸ்வரம் கோவிலில் மண்டியிட்டு கடவுளின் முன்பு தாயும் சேயும் நலமுடன் இருக்க வேண்டும் என தனக்காக சூர்யா வேண்டிக் கொண்டதை நினைவுகூர்ந்து பட விழா ஒன்றில் நடிகர் கருணாஸ் கண்கலங்கி பேசியுள்ளார்.