இது நமக்கான நேரம் பழங்குடியின மக்களுக்காக போராடும் சூர்யா : ஜெய் பீம் பர்ஸ்ட் லுக் வெளியானது!

lawyer suriya39 jaibhim
By Irumporai Jul 23, 2021 01:05 PM GMT
Report

நடிகர் சூர்யாவின் பிறந்தநாளான இன்று ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் ஜெய்பீம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

கூட்டத்தில் ஒருத்தன்'படத்தை இயக்கிய டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூர்யா தனது 39-வது படத்தில் நடித்து வருகிறார்.

சூர்யா இந்தப் படத்தில் பழங்குடியின மக்களின் உரிமைக்காக போராடும் வழக்கறிஞராக நடிக்கிறார்.

சூர்யாவின் 2D என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தான் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது.

இன்று சூர்யா பிறந்தநாளைக் கொண்டாடுவதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சூர்யா 39 படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. படத்திற்கு ஜெய் பீம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

பழங்குடியின மக்களும் போஸ்டரில் உள்ளனரில். இந்தப் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.