‘’ திரும்ப வந்துட்டேன்னு சொல்லு'’ - ஐபிஎல்லில் மீண்டும் சுரேஷ் ரெய்னா

sureshraina returnipl
By Irumporai Mar 02, 2022 07:59 AM GMT
Report

ஐபிஎல் தொடரில் இருந்து இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் விலகியதை அடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணியில் சுரேஷ் ரெய்னா இடம் பெறலாம் என்று கூறப்படுகிறது.

மிஸ்டர் ஐபிஎல் என அனைவராலும் அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவை இம்முறை ஐபிஎல் ஏலத்தில் அவரது பழைய அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) வாங்கவில்லை.

சுரேஷ் ரெய்னா csk -ல் இடம் பெறாமல் போனது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இப்படிப்பட்ட நிலையில் ஐபிஎல் அணி ஒன்று சுரேஷ் ரெய்னாவுக்கு தங்கள் அணியில் இடம் கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஐபிஎல் சீசனில் புதிய அணியான குஜராத் டைட்டன்ஸ் ஜெர்சியில் உள்ளார். இதையடுத்து, சுரேஷ் ரெய்னா ஐபிஎல் 2022ல் நுழையப் போகிறார் என்றும், அவர் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பெறலாம் என்றும் சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.

ஐபிஎல் தொடரில் இருந்து இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் விலகியதை அடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணியில் சுரேஷ் ரெய்னா இடம் பெறலாம் என்று கூறப்படுகிறது. ரெய்னாவின் புகைப்படத்தை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.  

You May Like This