‘அடுத்த ஐபிஎல் சீசனில் எப்படியாவது விளையாட வேண்டும்’ - சூப்பர் திட்டத்தோடு காய் நகர்த்தும் சின்ன தல

Chennai Super Kings IPL 2022 Suresh Raina
By Swetha Subash May 07, 2022 02:41 PM GMT
Report

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா மீண்டும் கிரிக்கெட் போட்டியில் ஆட விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுரேஷ் ரெய்னா, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து கடந்த 2020-ம் ஆண்டு ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன் பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி இருந்தாலும், ஐபிஎல் மெகா ஏலத்தில் அவரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை.

இதனையடுத்து சுரேஷ் ரெய்னா சிறிது வாரம் ஐபிஎல் வர்ணனையாளராக பணிபுரிந்தார். 35 வயதான சுரேஷ் ரெய்னா, கடந்த 2 ஆண்டுகளாக உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் ஏதிலும் விளையாடவில்லை.

‘அடுத்த ஐபிஎல் சீசனில் எப்படியாவது விளையாட வேண்டும்’ - சூப்பர் திட்டத்தோடு காய் நகர்த்தும் சின்ன தல | Suresh Raina To Perform In Local Matches Aim Ipl

இதன் காரணமாக அவர் ஃபார்மில் இல்லை என்ற காரணத்தால் தான், அவரை எந்த ஐபிஎல் அணியும் மெகா ஏலத்தில் எடுக்கவில்லை என்ற கருத்து கிரிக்கெட் ரசிகர்களிடம் பரவலாக இருந்து வருகிறது.

இந்நிலையில், நடந்து முடிந்த இந்தாண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் தம்மை யாரும் எடுக்காததால் விரக்தி அடைந்துள்ள ரெய்னா, அடுத்த ஐபிஎல் சீசனை குறிவைத்து காய் நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘அடுத்த ஐபிஎல் சீசனில் எப்படியாவது விளையாட வேண்டும்’ - சூப்பர் திட்டத்தோடு காய் நகர்த்தும் சின்ன தல | Suresh Raina To Perform In Local Matches Aim Ipl

உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து விளையாடி, அதில் தமது திறமையை நிரூபித்தால், ஐபிஎல் வாய்ப்பு தானாக வரும் என்பதால் இந்த திட்டத்தில் ரெய்னா இறங்கி உள்ளார்.