சின்ன தல சுரேஷ் ரெய்னா, டூபிளசியை கழட்டிவிட்ட சென்னை அணி - கடும் கோபத்தில் ரசிகர்கள்

CSK Suresh Raina Released Faf Du Plessis
By Thahir Dec 01, 2021 07:44 AM GMT
Report

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சுரேஷ் ரெய்னா, டூபிளசி போன்ற முக்கிய வீரர்கள் தக்க வைக்கப்படாதது சென்னை ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் 2022 மெகா ஏலம் நடக்க இருப்பதால் ஒவ்வொரு அணியும் தலா 4 வீரர்களை மட்டும் தக்கவைத்துக்கொள்ள பிசிசிஐ அனுமதித்துள்ளது.

மூன்று இந்திய வீரர்கள் ஒரு வெளிநாட்டு வீரராக இருக்கலாம் அல்லது இரண்டு இந்திய வீரர்கள் இரண்டு வெளிநாட்டு வீரர்கள் வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இவர்களைத் தவிர மற்ற அனைத்து வீரர்களும் ஏலத்திற்கு விடப்பட வேண்டும்.

மேலும் புதிதாக இணைந்துள்ள 2 அணிகள் ஏலத்திற்கு வெளியே 3 வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம் அதில் 2 இந்திய வீரர்கள் ஒரு வெளிநாட்டு வீரர் என மூன்று வீரர்களை தக்க வைத்துக்கொள்ள பிசிசிஐ அனுமதித்துள்ளது.

ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை தேர்வு செய்து அறிவிக்க நவம்பர் 30ம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் தக்க வைத்துள்ள வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

அந்தவகையில், நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தக்க வைக்கப்பட்டுள்ள வீரர்கள் பட்டியலும் வெளியாகியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் வீரராக ஜடேஜா தக்க வைக்கப்பட்டுள்ளார். ஜடேஜாவை சென்னை அணி 16 கோடி ரூபாய்க்கு தக்க வைத்துள்ளது.

இரண்டாவதாக தோனியை 12 கோடி ரூபாய்க்கு தக்க வைத்துள்ள சென்னை அணி, மூன்றாவதாக மொய்ன் அலியை 8 கோடி ரூபாய்க்கும் கடைசியாக ருத்துராஜ் கெய்க்வாட்டை 6 கோடி ரூபாய்க்கும் தக்க வைத்துள்ளது.

இந்தநிலையில், தோனி, ஜடேஜா போன்ற வீரர்களை சென்னை அணி தக்க வைத்துள்ளது ரசிகர்கள் மகிழ்ச்சியை கொடுத்திருந்தாலும், சின்ன தல சுரேஷ் ரெய்னாவையும், டூபிளசிஸ் போன்ற சிறந்த வீரரையும் சென்னை அணி தக்க வைக்காதது ரசிகர்கள் மத்தியில் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

மெகா ஏலத்திலாவது சுரேஷ் ரெய்னாவை சென்னை அணி மீண்டும் எடுக்க வேண்டும் என்பதே சென்னை அணியின் ரசிகர்கள் விருப்பமாக உள்ளது.