சுரேஷ் ரெய்னா உறவினர் கொலை வழக்கு - குற்றவாளியை சுட்டுக் கொன்ற போலீசார்

Uttar Pradesh Suresh Raina Death
By Thahir Apr 02, 2023 02:57 AM GMT
Report

கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் உறவினர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியை உத்தர பிரதேச காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர்.

சுரேஷ் ரெய்னா உறவினர் கொலை வழக்கு 

கடந்த 2020 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில்பல்வேறு கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு சுரேஷ் ரெய்னாவின் மூன்று உறவினர்களை கொன்றதற்காக ரஷீத் (எ) சிப்பைய்யா என்ற கொலைகாரனை அம்மாநில போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.அவனை கண்டுபிடித்து கொடுப்பவருக்கு ரூ.50,000 சன்மானம் என்றும் விளம்பரம் செய்தனர்.

Suresh Raina cousin murder case

ஆகஸ்ட் 19 மற்றும் 20 ஆம் தேதி இரவு பதான்கோட்டின் தர்யால் கிராமத்தில் ரஷீத் (எ) சிப்பைய்யா நடத்திய தாக்குதலில் ரெய்னாவின் மாமா அசோக் குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார், குமாரின் மகன் கவுஷல், காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்பு உயிரிழந்தார். மேலும் அவரின் மனைவி மனைவி ஆஷாராணி மற்றும் இருவர் காயமடைந்தனர்.

சுட்டுக்கொன்ற போலீசார்

இந்நிலையில் நேற்று  மாலை உத்தர பிரதேச மாநிலம் ஷாப்பூர் காவல் நிலையப் பகுதியில் சிப்பைய்யா கும்பலைச் சேர்ந்தவர்கள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து அங்கு விரைந்த உபி காவல்துறையினர்கள் மீது அந்த கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியது.

அந்த இடத்தில்,சிப்பைய்யாவும் இருந்துள்ளான். போலீசார் நடத்திய எதிர்தாக்குதலில் சிப்பைய்யா சுட்டுக்கொல்லப்பட்டான். மேலும் அவனது கூட்டாளிகள் தப்பியோடினர்.

அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றுவருவதாக உபி காவல் துறை சுப்ரிடென்ட் சஞ்சீவ் சுமன் தெரிவித்தார்.

இந்த துப்பாக்கிச் சூட்டின் பொது ஷாபூரின் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி பப்லு சிங்கிற்கு காயம் ஏற்பட்டது அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.