தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம் : தந்தைக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவு
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் பயின்ற 17 வயது மாணவி ஒருவர், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதற்கு அவரை மதமாற்றம் செய்ய பள்ளி நிர்வாகம் வற்புறுத்தியதே காரணம் என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனை பள்ளி நிர்வாகம் மறுத்த நிலையில், தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில்தஞ்சை பள்ளி மாணவி மரணம் தொடர்பான அரசின் மேல்முறையீட்டு வழக்கில் அவரது தந்தைக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிபிஐ விசாரணை எதிரான தமிழ்நாடு அரசின் வழக்கில் 4 வாரத்தில் தந்தை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்ற கிளைக்கு ஆணைக்கு தடையில்லை என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். பள்ளி மாணவி மரண விவகாரம் வேண்டுமென்றே அரசியல் ஆக்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு தனது வாதத்தில் தெரிவித்துள்ளது