ராகுல் காந்தி மேல்முறையீடு வழக்கு - அதிரடியாக உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்

Rahul Gandhi Narendra Modi Supreme Court of India
By Karthick Aug 04, 2023 08:53 AM GMT
Report

 மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கின் மேல்முறையீடு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது.

 அவதூறு வழக்கு

ராகுல் காந்தி மேல்முறையீடு வழக்கு - அதிரடியாக உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் | Supreme Courts Judgement In Ragul Gandhi Case

2019-ஆம் ஆண்டின் பொதுத்தேர்தலில் போது, ராகுல் காந்தி பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசினார் என்ற வழக்கில் குஜராத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது மட்டுமின்றி அவரை எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கமும் செய்திருந்தது.

மேல்முறையீடு வழக்கு  

ராகுல் காந்தி மேல்முறையீடு வழக்கு - அதிரடியாக உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் | Supreme Courts Judgement In Ragul Gandhi Case

இந்த தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட அதிகபட்ச 2 ஆண்டு சிறை தண்டனை குறித்த விளக்கம் இல்லை என கூறி தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.