வரலாற்றில் முதல்முறை - உச்சநீதிமன்ற வழக்கு விசாரணை இனி நேரலையில்...
உச்சநீதிமன்ற வழக்குகளின் விசாரணையை நேரலையில் ஒளிபரப்பும் நடைமுறை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
வழக்கு விசாரணை
உச்சநீதிமன்றத்தின் வழக்குகள் விசாரணை அனைத்தும் நேரடியாக ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வகுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், முதற்கட்டமாக சோதனை முறையில் 3 மாதங்களுக்கு தேசிய மற்றும் அரசியல் சாசன முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் இன்று முதல் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
நேரலையில்..
அதன் அடிப்படையில், முதல் வழக்காக பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான 10% இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கு விசாரணை இன்று நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
மேலும், டெல்லி அரசு - மத்திய அரசுக்கு இடையேயான அதிகாரம், மகாரஷ்டிர அரசியல் தொடர்பான வழக்குகளும் நேரலையில் ஒளிபரப்பப்படவுள்ளது.