கருக்கலைக்க அனுமதி; இங்க நிலுவையில் இருக்கையில் அங்க எப்படி? ஐகோர்ட்டை வெளுத்து வாங்கிய உச்சநீதிமன்றம்!
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது, உயர் நீதிமன்றத்தால் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும் எனக் கேட்கப்பட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமைக்குள்ளான 25 வயது பெண்ணின் 27 வார கருவைக் கலைப்பது தொடர்பாக ஆகஸ்ட் 7-ம் தேதி குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த குஜராத் நீதிமன்றம், பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவிட்டது. மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு, அந்த அறிக்கை ஆகஸ்ட் 10-ம் தேதி உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
சுப்ரீம் கோர்ட் அதிரடி
ஆனால், குஜராத் உயர் நீதிமன்றம் ஆகஸ்ட் 23-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தது. தொடர்ந்து அந்தப் பெண் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். இதற்கிடையில், குஜராத் நீதிமன்றம் பாதிக்கப்பட்ட பெண் கருக்கலைப்பு செய்யக் கூடாது எனத் தீர்ப்பளித்தது.
உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கை விசாரித்தது குறித்து விளக்கமளிக்க வேண்டும் எனக் குஜராத் அரசு மற்றும் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. மேலும், இது அரசியலமைப்பு தத்துவத்துக்கு எதிரானது.
``கருக்கலைப்பு செய்யும் அதே சமயம் குழந்தை உயிருடன் இருந்தால், அதை மாநில அரசின் கண்காணிப்பின் கீழ் வளர்க்க குஜராத் அரசுக்கு உத்தரவிடுகிறோம். இதையடுத்து, உரிய சிகிச்சை வழிமுறைகளோடு கருக்கலைப்பு செய்ய மருத்துவர்கள் குழுவுக்கு உத்தரவிடுகிறோம்”என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.