நாங்க இந்தியாவுக்கு மருத்து பொருட்கள் தருகிறோம் - கரம் கொடுக்கும் தென் கொரியா
கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் இந்தியாவிற்கு தேவையான மருத்துவ பொருட்கள் தந்து ஒத்துழைப்போம் என தென் கொரியா தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2 வது அலை விஸ்வரூபம் எடுத்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவிற்கு உதவ பல்வேறு நாடுகளும் முன்வந்துள்ளன.
இந்tத நிலையில் தென் கொரியா தூதரகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:
Korean govt to provide urgent medical supplies to India to help save lives in the face of the #COVID19 pandemic. Consultations are underway with the Indian side with regard to the specific medical items in need, such as oxygen concentrators: Embassy of South Korea
— ANI (@ANI) April 28, 2021
கொரோனா தொற்றை எதிர்கொண்டு உயிர்களை காப்பாற்றும் வகையில் இந்தியாவுக்கு தேவையான மருத்துவ பொருள்களை தென் கொரியா அரசு வழங்க உள்ளது.
ஆக்ஸிஜன் போன்ற தேவைப்படும் பொருள்கள் குறித்து இந்திய அரசிடம் ஆலோசனை நடத்தி வருகின்றோம்.
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு எங்களது அரசு தொடர்ந்து ஒத்துழைக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.
அரசுக்கு ரூபா 800 மில்லியன் இழப்பு : அர்ஜூன மற்றும் அவரது சகோதரருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் IBC Tamil