பாடி முடிச்சதும் சாதி என்னனு கேட்டாங்க - சூப்பர் சிங்கர் அருணா அதிர்ச்சி தகவல்!

Super Singer
By Sumathi Jun 26, 2023 09:50 AM GMT
Report

சூப்பர் சிங்கர் 9ஆவது சீசன் டைட்டில் வின்னர் அருணா பேசிய வீடியோ வைரலாகியுள்ளது.

சூப்பர் சிங்கர் 

விஜய் டிவியில் நடத்தப்படும் சூப்பர் சிங்கர் ரியாலிட்டி ஷோ மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இதுவரை 8 சீசன்கள் நடைபெற்றிருக்கின்றன. ஒன்பதாவது சீசன் கடந்த சில மாதங்களாக நடந்துவந்தது. போட்டியாளர்களாக ஏராளமானோர் கலந்துகொண்ட நிலையில்,

பாடி முடிச்சதும் சாதி என்னனு கேட்டாங்க - சூப்பர் சிங்கர் அருணா அதிர்ச்சி தகவல்! | Super Singer Season Title Winner Aruna Caste Issue

அருணா, அபிஜித், பூஜா, பிரசன்னா, பிரியா ஜெர்சன் ஆகிய ஐந்து பேரும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர். தொடர்ந்து, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நேற்று இறுதிப்போட்டி நடந்தது. ஹாரிஸ் ஜெயராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார்.

டைட்டில் வின்னர் 

அதில், மயிலாடுதுறையை சேர்ந்த அருணா சூப்பர் சிங்கர் 9ஆவது சீசனின் டைட்டிலை வென்றார். முதல் ரன்னர் அப்பாக ப்ரியா ஜெர்சன், இரண்டாவது ரன்னர் அப்பாக பிரசன்னா ஆதிசேஷன், மூன்றாவது ரன்னர் அப்பாக பூஜா வெங்கட்ராமன் தேர்வானார்கள்.

பாடி முடிச்சதும் சாதி என்னனு கேட்டாங்க - சூப்பர் சிங்கர் அருணா அதிர்ச்சி தகவல்! | Super Singer Season Title Winner Aruna Caste Issue

இந்நிலையில், டைட்டில் வின்னர் அருணா, "நான் கோவில்களில் பாட செல்லும்போதெல்லாம், பாடி முடித்த பின் ஒருத்தர், இரண்டு பேர் என்னிடம் கேட்கும் முதல் கேள்வியே நீங்கள் என்ன சாதி என்பதுதான். அதை வெளியே சொன்னால் அடுத்தது நம்மை பாட விட மாட்டார்களோ என்ற பயம் எனக்குள் இருக்கும்.

அதனால் வெளியே சொல்லாமல் தவித்து பயந்து பயந்து இருந்திருக்கிறேன். ஆனால் இனி எந்த மூலைக்கும் சென்று பாடுவேன், எனக்கு பயம் கிடையாது" எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.