‘சூப்பர் சிங்கர் ஜூனியர்’ நிகழ்ச்சியிலிருந்து திடீரென ப்ரியங்கா நீக்கம்? - ஷாக்கான ரசிகர்கள்
பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளியாக வலம் வந்தவர் தான் ப்ரியங்கா. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
இதனையடுத்து, ‘பிக்பாஸ் சீசன் 5’ கலந்து கொண்ட ப்ரியங்காவிற்கு இந்நிகழ்ச்சி மூலம் இன்னும் ரசிகர் பட்டாளம் கிடைத்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இவர் சென்றதால், விஜய் டிவியில் ‘சூப்பர் சிங்கர் ஜூனியர்’ நிகழ்ச்சியை மாகாபாவும், மைனா நந்தினி தொகுத்து வழங்கி வந்தனர்.
‘பிக்பாஸ் சீசன் 5’ நிகழ்ச்சி முடிந்ததும் மீண்டும் ப்ரியங்கா ‘சூப்பர் சிங்கர் ஜூனியர்’ நிகழ்ச்சிக்கு மறுபடியும் ரீ-என்ட்ரி கொடுத்தார்.
இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இதனால், தற்காலிகமாக தொகுத்து வழங்கி வந்த மைனா நந்தினி இந்நிகழ்ச்சியிலிருந்து விலகினார்.
இதற்கிடையில், ஒரே வாரத்தில் மீண்டும் ‘மைனா’ நந்தினியே தொகுத்து வழங்க நியமிக்கப்பட்டுள்ளார். திடீரென ப்ரியங்கா நிகழ்ச்சி வராமல் போனதற்கு காரணம் வெளியாகி உள்ளது.
நீண்ட விடுப்புக்கு பிறகு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வந்த பிரியங்கா, தனது பிக்பாஸ் நண்பர்களான பாவனி, அபிஷேக், மதுமிதா உள்ளிட்டோருடன் ஐதராபாத் சென்றுள்ளார்.
இதனால், ஷூட்டிங்கிற்கு பிரியங்கா வரவில்லை. இதனால், கடுப்பான நிகழ்ச்சி குழுவினர், இனி... ‘மைனா’ நந்தினியே தொகுத்து வழங்கட்டும் என்று முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.