கொலைக்குற நாய்கள் பத்தி கவலைப்படாதீங்க சார்- நடுவருக்கு ஆறுதல் கூறிய போட்டியாளர்
கொலைக்குற நாய்கள் பத்திலா கவலை படாதீங்க சார் என்று சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் போட்டியாளர் நடுவர் பென்னி தயாலுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
பிரபல விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இனி பங்குபெற மாட்டேன் என பிரபல பின்னணி பாடகர் பென்னி தயால் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஹிட் நிகழ்ச்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியும் ஒன்று. தற்போது சூப்பர் சிங்கர் பெரியவர்களுக்கான 8வது சீசன் நடந்து வருகிறது. வழக்கம் போல் பிரியங்கா மற்றும் மாகாபா தான் தொகுப்பாளர்களாக இருக்கிறார்கள். இந்நிகழ்ச்சியில் ஒரு ஜாலியான நடுவராக இருந்து வந்தவர் பென்னி தயால்.
இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இனி நான் சூப்பர் சிங்கர் பற்றி எதுவும் பதிவு போட போவதில்லை என்றும் அதில் இருந்து வெளியேறுகிறேன் என்றும் பதிவிட்டுள்ளார். மேலும், என்னால் எல்லாம் மோசமான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாது, நான் சாதாரண மனிதன், எல்லாவற்றிற்கும் நன்றி எனவும் பதிவு செய்துள்ளார்.

இதனை கண்ட சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி போட்டியாளர்கள் பலரும் பென்னி தயாலின் இந்த பதிவை கண்டு அவருக்கு ஆறுதல் கூறிவருகின்றனர்.
அந்த வகையில், இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர் குரு, இது போன்ற குலைக்கும் நாய்களை பற்றி எல்லாம் கவலை படாதீர்கள், அவர்கள் குலைத்து கொண்டே இருக்கட்டும், அது மட்டும் தான் அவர்களால் சரியாக செய்யமுடியும். நாங்கள் எப்போதும் உங்களை நேசிக்கின்றோம் என்று பதிவிட்டிருக்கிறார்.